Saturday, August 27, 2011

அண்ணா ஹசாரேவும் - ஊழல் ஒழிப்பும்

இந்த விழயத்தை பற்றி நிறைய எழுதப்பட்டுவிட்டது. அருந்ததி ராய் முதல் பல அறிவுஜீவிகள் வரை இந்த போராட்டத்திற்கு ஜாதி மத அடையாளங்கள் அளித்து சமாதி கட்ட முயன்றனர்.

இவர்கள் எல்லோரும் வைக்கும் ஒரு பொதுவான கேள்வி "இந்த சட்டம் வந்தால் ஊழல் முற்றாக ஒஜிந்துவிடுமா?" என்பதுதான்.

இந்த கேள்வியே இந்திய ஊழல்களில் ஊற்றுக்கண் என்பது என் கருத்து. நமக்கு எல்லாமே சுலபமாக வேண்டும். ஒரே நாளில், ஒரே நிமிடத்தில், ஒரு சட்டத்தில் எல்லாம் நடக்க வேண்டும். அப்டடி நடக்கவில்லை என்றால் அதற்கு தேவையான குறுக்கு வழிகள் எல்லாம் கண்டுபிடிக்கப்படும். எந்த ஒரு காரியத்தையும் செய்துமுடிக்க தேவைப்படும் உழைப்பும் நேர்மையும் நம்மிடம் கிடையாது. நாம் எதிர்பார்ப்பது எல்லாம் ஒரு இந்தியன் தாத்தாவையம், முதல்வன் அர்ஜுனையும் தான்.

இந்த பின்னணியை வைத்து பார்க்கும் பொழுதுதான் இந்த போராட்டம் மிகவும் முக்கியமானதாக தெரிகிறது. என்னை பொருத்தவரை கண்டிப்பாக இந்த சட்டம் ஊழலை ஒழிக்கும் ஒரு மந்திர கோல் அல்ல, இது ஒரு தொடக்கம் மடும்மே, ஒரு பலமான அடித்தளம். இந்த போராட்டத்தின் வெற்றி என்பது லோக்பால் மசோதா அல்ல. இந்த நாட்டின் மக்களை ஊழல்க்கு எதிராக திரட்டி ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மூலமாகவே அதற்க்கு எதிராக ஒரு சட்டத்தை கொண்டுவர செய்தது.

இதை பற்றி இந்திய ஊடங்களில் வரும் செய்தி ஒன்று முற்றிலும் வெறுப்பு மற்றும் அவநம்பிக்கையை ஊட்வதாக இருக்கிறது...இல்லையென்றால் மிகை உணர்ச்சியால் புகழ் பாடுவதாக இருக்கிறது(Anna is India போன்றவை). நான் மிகவும் மதிக்கும் துக்ளக் சோ கூட இதை கேவலமான முறையில் விமர்சனம் செய்வது சற்று வருத்தமடைய செய்கிறது.

நான் படித்த வரையில் இதை பற்றி மிக சிறப்பாக எழுதுவது எழுத்தாளர் ஜெயமோகன் மட்டுமே. இதை பற்றிய அவரது கட்டுரையின் தொகுப்பு இங்கே.

Monday, May 3, 2010

புகைப்படங்கள் - PIT க்கு நண்றி

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு கேமராவை கையில் எடுத்தேண்...சில சுமாரான புகைபடங்கள் வந்தண....PIT துணை கொண்டு அதை மெருகேற்றிய போது வந்த படங்கள் இவை....PIT க்கு நண்றி










மேலும் படங்கL எனது flickr பக்கத்தில்........

Friday, June 12, 2009

கதைக்குள் கதை

நான் மது, மதுமிதா, ரொம்ப ஜாலியா வளர்ந்து, ஒரு நல்ல வேலையில் சேர்ந்து, கல்யாணம் செய்து கொண்டு கணவனின் அன்பு தொல்லையால் அந்த வேலையை விட்டு, சிறு, சிறு ஊடல்களுடன் அவனுடன் சைனாவில் இருக்கிறேன்.

'Inga Romba Bore, naan india vuku poren :@' என என் கணவனின் கூகிளில் பிங்க -- சற்ற்ற்ற்ற்ற்று நேரம் கழித்து,'I have send you a short story, atha padi' என ரிப்ளை செய்துவிட்டு offline ல போயிட்டான் பாவி.

இருங்க அப்படி என்ன தான் அவன் அனுப்பி இருக்கான்னு படிப்போம், எல்லாருக்கும் எழுதும்போது தான் spelling mistake வரும் எனக்கு படிக்கும் போதே வரும்...சின்ன பொன்னு தான? கொஞ்சம் பொறுத்துகோங்க.



' உனக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் கிடையாது' போனில் தனது தம்பி ஹரியிடம் வருத்தப்பட்டான் அமுதன்

'என்னடா பிரச்சனை' மறுமுனையில் ஹரி

'உங்க அம்மாவும் அப்பாவும் ஜாதகம் பார்த்து பொண்ண fix பண்றத்துக்குள்ள உனக்கு வயசாயிடும், இப்போ கூட ஒரு பொண்ணு ஜாதகம் வந்து இருக்கு, பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப interesteda இருக்காங்க, ஆனா அப்பா அம்மா தான் ஜாதகம் சரியில்லை வேண்டாம்னு சொல்றாங்க

'ம்ம்ம்' ஹரி

நான் சொல்றத கேளு, உன்னோடு படிச்ச, இல்ல இப்போ உன்னோட வேலை பாக்கற பொண்ண யாரையாவது உனக்கு புடிச்சு இருந்தா சொல்லு பேசாம உனக்கு அந்த பொண்ண பார்த்துடுவோம்

'சரி பார்க்கலாம் டா' என போனை வைத்தான் ஹரி.

பெண் பார்த்து, கல்யாணம் செய்வது எல்லாம் அப்பா, அம்மா, அண்ணன் வேலை என நினைத்த ஹரி சற்றே குழம்பி, அம்மாவிடம் பேசினான்

'என்னம்மா நடக்குது அங்க'

'அமுதன் போன் பண்ணினானா ?'

'ஆமா'

'நமக்கு தெரிஞ்ச பொண்ணா இருந்தா ஜாதகம் பார்க்காம கல்யாணம் பண்ணலாம், தெரியாத பொண்ணுக்கு என்ன செய்ய?'

'உனக்கு தெரிஞ்ச இல்ல பிடிச்ச பொண்ணா இருந்தா சொல்லு, ஜாதகம் பார்க்காம கல்யாணம் பண்ணலாம் என்று போனை வைத்தாள் அம்மா

உடனே அவனுக்கு தன்னுடன் வேலை பார்க்கும் அல்லது தன்னுடன் படித்த ஒரு பெண்ணின் ஞாபகம் வந்திருக்கும் என நீங்கள் எதிர்பார்த்தால் அது தவறு. அவன் படித்தது எல்லாம், ஆண்கள் பள்ளியிலும் கல்லூரியிலும் அவன் வேலை பார்க்கும் project ல் கூட ஒரே ஒரு பெண் தான் அதுவும் அவன் manager. ஆதலால் அவன் அம்மா மற்றும் அண்ணன் சொல்வதை யோசித்து கூட பார்க்கவில்லை.

இந்த சம்பவம் முடிந்து சரியாக ஒரு மாதம் முடிந்து ப்ரியா அவன் வாழ்க்கையில் வந்தாள். ப்ரியா அவனுடன் ஐந்தாம் வகுப்பு வரை படித்த பெண், 18 வருடங்களுக்கு பிறகு orkut ல் பார்த்தான். அந்த நட்பு மெதுவாக mail, chat என phone வரை வளர்ந்தது.

அன்று...

'Hiiii ப்ரியா'

'Hi ஹரி'

'ஹே வாய்ஸ் என்ன ட்ல்லா இருக்கு'

'வீட்ல ஹிம்சை தாங்க முடியல பா, எனக்கு ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணும்னா இந்த ஜென்மத்ல முடியாது பா'

'Same blood here, எங்க வீட்லயும் அதே பிரச்சனை தான்'

'ம்ம்ம்'

'பேசாம என்ன கல்யாணம் பண்ணிக்கரையா ?'

'என்ன இப்படி திடிர் னு கேட்கர'

'தோனுச்சு கேட்டேன்'

'இல்ல ஹரி, எங்க வீட்ல லவ் marriage னு சொன்னா ஒத்துக்க மாட்டாங்க'

'First of all let me make this clear, I am not saying "I Love you", I am saying that I would like to marry you'...திடிர் என ஆங்கிலத்துக்கு மாறினான் ஹரி

'அப்படினா...'

'தோ பார், முதல்ல உனக்கு இதுல ஒகே வா னு சொல்லு, then எங்க வீட்ல சொல்லி உங்க வீட்க்கு பேச சொல்றேன்...we will take this as arranged marriage itself'

'எங்க வீட்ல மாட்டேன் சொல்லிடாங்கனா'...

'சொல்லிடாங்கனா....ம்ம்ம்' மேலே பேச சற்று தயங்கினான்...

'சரி ஹரி நான், நாளைக்கு காலம்பர சொல்றேனே...எங்க வீட்ல எப்படி பேசனனும்னு'

ஹரி ஒரு நிமிடம் தரையிலிருந்து இரண்டு அடி மேலே சென்றான்...'பை ஹரி, நாளைக்கு கால் பன்றேன்'

'பை குட் நைட்'

ஹரி அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை...மறு நாள் வரப்போகும் அழைப்பிர்காக காத்து கொண்டிருந்தான்....

1...2....3...என நாட்கள் நகர்ந்தன ஆனால் அவளிடமிருந்து அழைப்பில்லை இவனது அழைப்பிர்க்கும் பதில் இல்லை...சரி நாம் தான் எதோ தவறு செய்துவிட்டோம் என நினைக்கும் தறுவாயில்...

'Hi ஹரி' என பிங் செய்தாள் ப்ரியா

'ட்ரிங்..ட்ரிங்...ட்ரிங்...'
சே கதை intresting a போகும் போது தான் யாராவது வந்து டிஸ்டர்ப் பன்னுவாங்க - இருங்க யார் வந்து இருக்காங்க பார்த்துட்டு வந்து கதைய continue பன்னுவோம்...

'மது...நான் சொல்லிருக்கேன் ல என் friend ப்ரியா னு...அவ இங்க சைனா ல தான் இருக்கா...அதுவும் பக்கதுல 10 mins drive ல தான் இருக்கா நாம போய் பார்த்துட்டு வரலாமா?'

சரிங்க என் கனவர் ஹரி வந்துட்டார்...இனிமே எனக்கு இந்த கதை தேவை இல்ல...bye.

Monday, September 22, 2008

கவிதை : அழகு

வானம் மறைக்கும் கருமேகம்
கருமேகத்தை கணிய வைக்கும் குளிர் காற்று
குளிர் காற்றால் வரும் சிறு தூறல்
சிறு தூறளால் நனைந்த வயல் வெளிகள்
அதன் வழியாக செல்லும் சிறு ரயில்
ரயில் நிற்கும் இடத்தில் ஒரு சிறு உணவகம்
அங்கே கொதிக்கும் ஏலத்தின் மனம்
அதனால் வரும் பசி...
இவை அனைத்தும் அழகாய் இருக்கும் அவள் அருகில் இருந்தால்....

Saturday, September 13, 2008

சில புகைப்படங்கள்


நான் பதிவு போட ஆரம்பித்ததை பத்தி யார் என் மேனேஜர் கிட்ட போட்டு கொடுத்தாங்கன்னு தெரியல, ஆபீஸ் ல ஆணி புடுங்கற வேலை ரொம்ப ஜாஸ்தி ஆயிடிச்சு, அதனால போன பதிவுல கமெண்ட் போட்ட யாருக்கும் நன்றி கூட சொல்லமுடியல, அதை இங்க சொல்லிக்கறேன்.
PIT போட்டிக்காக photo எடுத்த பிறகு இன்னிக்கு தான் காமெராவை கைல எடுக்கறேன். இதுல நிறைய போட்டோ இன்னிக்கு ஒரு உயிரியல் பூங்கா எடுத்தது, சில போட்டோ இங்க இருக்கற நண்பர் வீட்டில் எடுத்தது. பார்த்துட்டு எப்படி இருக்குன்னு கமெண்ட் பெட்டில திட்டிட்டு போங்க...எல்லார்க்கும் Happy WeekEnd !!!
IMG_2281


IMG_2280


IMG_2278


IMG_2252




IMG_2253


IMG_2265


IMG_2273


IMG_2274


IMG_2235


IMG_2282


IMG_2287


IMG_2292


IMG_2316


IMG_2224


IMG_2219

Wednesday, September 10, 2008

சமையல் கதைகள் - நண்பர்களுக்கு விருந்து

நான் காபி போட்ட கதையை தொடர்ந்து மேலும் சில சமையல் அனுபவங்கள் :)

அப்போ நான் ஜப்பானுக்கு வந்து 3 மாசம் முடிஞ்சிடுச்சு. நானும் கைல கால்ல சுட்டுகிட்டு (அது சரி சமைக்கும் போடு கைல சுடும் அது எப்படி கால்ல சுடும் , தெரிஞ்சவங்க கமெண்ட் ல சொல்லுங்க ) சமையல் கத்துகிட்டேன். அப்போ புதுசா வேற ஒரு வீட்டுக்கு மாறி இருந்தேன். அங்க ஏற்கனவே இருந்த என்னோட நண்பரும், அவர் மனைவியும் ரொம்ப ஹெல்ப் பண்ணினாங்க. அவங்களுக்கு ஒரு நாளைக்கு சாப்பாடு போடனும்னு எனக்கு வேண்டாத ஆசை ஒன்னு வந்துச்சு. அதுக்கு தூபம் போடற மாதிரி என் டீம் ல இருந்த பாலாவும், ஹர்ஷும் அவங்களும் வந்து எனக்கு சாப்பாடு செய்ய ஹெல்ப் பன்றேனு சொன்னாங்க.

'இத இத இததான் நானும் எதிர் பார்த்தேன்' அப்டின்னு சொல்லிட்டு, நாங்க 3 பேரும் என்ன செய்யலாம் னு டீப்பா திங்க் பண்ணி ஒரு முடிவுக்கு வந்தோம். அது படி
1. அருண் - சாம்பார், கோபி மசாலா
2. பாலா - உருளை கிழங்கு பொரியல், பாயசம்
3. ஹர்ஷ் - சப்பாத்தி, டால்
இப்டி முடிவாச்சு எங்க மெனு.

'The 'D' day has arrived' னு சொல்ற மாதிரி அந்த நாளும் வந்துச்சு.
பாலாவும், ஹர்ஷும் காலைல 9.30 க்கு வீட்டுக்கு வரேன்னு சொன்னாங்க...நானும் பொறுத்து பொறுத்து பார்த்தேன் மணி 10, 10.30 இப்படியே ஓடுது, நானும் டாலுக்கு பருப்பு வேக வச்சி, பொரியலுக்கு உருளை கட் பண்ணி இப்டி எல்லாரோட வேலையும் பார்க்கிறேன்...ஆனா இவங்க வந்த பாட காணும்.
சரி பொருத்தது போதும் பொங்கி எழுவோம் னு சொல்லிடு ஒரு 11 மணிக்கு பாலாவுக்கு போன் பண்ணினா 'எ ழு ப் பி னத்துக்கு தேங்க்ஸ் அருண், சீக்கிரமா கிளம்பி வரேன்' னு சொல்லரா.

இப்டி அவங்க ரெண்டு பேரும் சீக்கிரமா வந்து சேரும் பொது மணி 12.30. 'Arun Can we have ready made chappathi instead of preparing now??' இது ஹர்ஷ். பாலா இந்த விஷயத்தில் விவரம் ஜாஸ்தி வரும் போதே கைல ரெடி டு ஈட் பாயசம் மிக்ஸ் எடுத்துட்டு வந்துட்டா. சரி இவங்க ரெண்டு பேரும் ஒரு குரூப் பா தான்யா கிளம்பி இருகாங்க னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டு மீதி ஐடம் எல்லாத்தியும் நான் சமைச்சி முடிச்சேன்.

அதுக்குள்ள நண்பர் வீட்டுக்கு வந்துட்டார். சரி அவங்களுக்கு போர் அடிக்க கூடாதுன்னு லேப்டாப் ல தசாவதாரம் படாத போட்டுட்டு நான் சமைசிகிட்டு இருந்தேன். ஒரு வழியா நாங்க சமைச்சி முடிச்சு அவங்க சாப்பிடும் பொது படாத ஏற குறைய முழுசா பார்த்து முடிச்சிடாங்க.

இப்டி ஒரு வழியா அவங்க சாப்பிட்டு முடிக்கும் பொது மணி 4.30. சாப்பிட்டு முடிச்சிட்டு என் நண்பரும் அவர் மனைவியும் சொன்ன கமெண்ட்
'Arun can prepare 5 different dishes in same taste'

Saturday, September 6, 2008

என்னை வாழ வைத்த தெய்வங்கள்

நேற்று ஆசிரியர் தினம்...நேற்றே இந்த பதிவை இட வேண்டும் என எண்ணி இருந்தேன்.
ஆனா ஆபீஸ் ஆணி புடுங்கற வேலை ஜாஸ்தி ஆயிடிச்சு, நெருப்பு நறிய (Firefox a எல்லாரும் இப்டி தான் எழுதறாங்க) தொறக்க முடியாம போயிடிச்சு.

என்ன கட்டி மேய்த்த எல்லா ஆசிரியரும் தெய்வங்கள் தான், ஆனா அதுல ஒரு 3 பேர் மட்டும் ஸ்பெஷல் - அவங்களுக்காக அவங்கள பத்தின பதிவு இது.

Hema Miss : நான் வாழ்க்கையில் மறக்க முடியாத, மறக்க கூடாத ஒரு ஆத்மா. எனக்கு L.K.G முதல் டியூஷன் எடுத்தவங்க (நான் அவ்ளோ வாலு, என்ன வீட்ல வச்சி இருக்க முடியாம அப்பா L.K.G க்கே டியூஷன் அனுப்பிட்டாங்க). என்ன ஒரு ஸ்டுடென்ட் போல பார்காம ஒரு குழந்தை மாதிரி தான் ட்ரீட் பண்ணுவாங்க. இவங்க கிட்ட டியூஷன் போறது எதோ எனக்கு சொந்தகாரங்க வீட்டுக்கு போற மாதிரி இருக்கும், ஆனா டியூஷன் முடிச்சிட்டு வெளியல வரும் பொது தேவையானது எல்லாம் படிச்சிட்டு ஹோம் வொர்க் முடிச்சிட்டு வந்து இருப்பேன். 7 வருஷம் இவங்க கிட்ட டியூஷன் படிச்ச காலத்துல்ல எனக்கு வீட்டுக்கு வந்து படிக்க வேண்டிய கட்டாயமே கிடையாது. ஆனா இதுவே எனக்கு பின்னாடி ஒரு பிரச்சனையா போச்சு. வீட்டுக்கு வந்தா படிக்கவே மாட்டேன். இவங்களுக்கு திருமணம் ஆகி வெளியூர் போன பிறகு எனக்கு வேற நல்ல டியூஷன் டீச்சர் கிடைக்காம ரெண்டு வருஷம் ரொம்ப கஷ்ட பட்டேன். அப்புறம் வேற ஒரு ஸ்கூல் மாறின பிறகு தான் கொஞ்சம் மீண்டு வந்தேன்.
எல்லாருக்கும் தாய் தான் முதல் ஆசிரியர் னு சொல்ல்வங்க, எனக்கு முதல் ஆசிரியர் தாய் போல அமைந்தது என் பாக்கியம்.

ஒரு வழியா வேற ஸ்கூல் மாறி, திருப்பி கொஞ்சம் நல்ல படிக்க ஆரம்பிச்சேன். புது ஸ்கூல் ரொம்ப நல்ல இருந்துச்சு, எங்க அப்பா படிச்ச ஸ்கூலும் இது தான். அங்க இருந்த பாதி டீச்சர்ஸ் அப்பா கூட படிச்சவங்க இல்ல அப்பா க்கு கிளாஸ் எடுத்தவங்க அதனால அங்க நான் செல்ல பிள்ளை.

அங்க 11th படிக்கும் போது எனக்கு கணக்கு பாடம் எடுத்த ஜெயசீதா maam தான் என் இரண்டாவது தெய்வம். ஆசிரியர் வேலையை தொழிலாக செய்யாமல் ஒரு சேவையாக இன்றைக்கும் செய்து வருபவர். Integration and Differentiation இவங்கள மாதிரி சொல்லி தருவதற்கு ஆள் இல்ல. அதை தவிர இவங்க கிட்ட எனக்கு பிடிச்சது ஸ்டுடென்ட்ஸ் மேல இவங்க காட்டும் அக்கறை. எக்ஸாம் டைம் போது இவங்க வீட்லயே தங்கி படிக்கற ஸ்டுடென்ட்ஸ் கூட இருகாங்க. நான் இவரிடம் 11th and 12th Maths டியூஷன் போனேன், ஆனால் அவங்க இதுக்காக என்கிட்ட 1 ரூபாய் கூட பீஸ் வாங்கல. இதுக்கு அவங்க சொன்ன காரணம் - 'நீ Naturala 160 marks எடுக்க வேண்டிய பையன், உன்ன நான் 190+ எடுக்க வச்சா தானே நான் உனக்கு டியூஷன் சொல்லி கொடுத்தேன் னு அர்த்தம், +12 public exam 190+ marks எடு, நான் உங்க வீட்டு வாசல்ல ஈட்டி காரி மாதிரி வந்து பீஸ் வாங்கறேன்'.
இத அவங்க சொன்னது 11th exam முடிந்த பிறகு. ஆனா நான் +12 Maths எடுத்த marks 155.
அதனால marks வந்த பிறகு நான் அவங்கள போய் பார்க்க கூட இல்ல. ஒரு வழியா B.Sc முடிச்சிட்டு ஒரு நல்ல university la PG கிடைச்ச பிறகு தான் அவங்கள பார்க்க போனேன், அப்போ அவங்க 'நீ இந்த university ஸீட் வாங்கினது பத்தாது, You deserve more for your talent' னு ஊக்க படுத்தினாங்க. இதற்க்கு பிறகு ஒரு நல்ல வேலை கிடைத்த பிறகு அவங்களை போய் பார்த்தேன் அப்போ அவங்க சொன்ன வார்த்தை 'இப்போ தான் I am relived. Now you know how to utilize your talent. இத நீ உன் லைப் எல்லா இடத்திலும் அப்ளை பண்ணு You will be more successful' னு வாழ்த்தி அனுப்பினாங்க. ஆனா இன்னிக்கு வரைக்கும் அவங்களுக்கு அந்த 11th, 12th டியூஷன் பீஸ் கொடுக்கல, ஏன்னா அதை இனிமே பணமா கொடுப்பதில் அர்த்தம் இல்லைனு எனக்கு தெரியும்.

எல்லாருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.