Wednesday, September 10, 2008

சமையல் கதைகள் - நண்பர்களுக்கு விருந்து

நான் காபி போட்ட கதையை தொடர்ந்து மேலும் சில சமையல் அனுபவங்கள் :)

அப்போ நான் ஜப்பானுக்கு வந்து 3 மாசம் முடிஞ்சிடுச்சு. நானும் கைல கால்ல சுட்டுகிட்டு (அது சரி சமைக்கும் போடு கைல சுடும் அது எப்படி கால்ல சுடும் , தெரிஞ்சவங்க கமெண்ட் ல சொல்லுங்க ) சமையல் கத்துகிட்டேன். அப்போ புதுசா வேற ஒரு வீட்டுக்கு மாறி இருந்தேன். அங்க ஏற்கனவே இருந்த என்னோட நண்பரும், அவர் மனைவியும் ரொம்ப ஹெல்ப் பண்ணினாங்க. அவங்களுக்கு ஒரு நாளைக்கு சாப்பாடு போடனும்னு எனக்கு வேண்டாத ஆசை ஒன்னு வந்துச்சு. அதுக்கு தூபம் போடற மாதிரி என் டீம் ல இருந்த பாலாவும், ஹர்ஷும் அவங்களும் வந்து எனக்கு சாப்பாடு செய்ய ஹெல்ப் பன்றேனு சொன்னாங்க.

'இத இத இததான் நானும் எதிர் பார்த்தேன்' அப்டின்னு சொல்லிட்டு, நாங்க 3 பேரும் என்ன செய்யலாம் னு டீப்பா திங்க் பண்ணி ஒரு முடிவுக்கு வந்தோம். அது படி
1. அருண் - சாம்பார், கோபி மசாலா
2. பாலா - உருளை கிழங்கு பொரியல், பாயசம்
3. ஹர்ஷ் - சப்பாத்தி, டால்
இப்டி முடிவாச்சு எங்க மெனு.

'The 'D' day has arrived' னு சொல்ற மாதிரி அந்த நாளும் வந்துச்சு.
பாலாவும், ஹர்ஷும் காலைல 9.30 க்கு வீட்டுக்கு வரேன்னு சொன்னாங்க...நானும் பொறுத்து பொறுத்து பார்த்தேன் மணி 10, 10.30 இப்படியே ஓடுது, நானும் டாலுக்கு பருப்பு வேக வச்சி, பொரியலுக்கு உருளை கட் பண்ணி இப்டி எல்லாரோட வேலையும் பார்க்கிறேன்...ஆனா இவங்க வந்த பாட காணும்.
சரி பொருத்தது போதும் பொங்கி எழுவோம் னு சொல்லிடு ஒரு 11 மணிக்கு பாலாவுக்கு போன் பண்ணினா 'எ ழு ப் பி னத்துக்கு தேங்க்ஸ் அருண், சீக்கிரமா கிளம்பி வரேன்' னு சொல்லரா.

இப்டி அவங்க ரெண்டு பேரும் சீக்கிரமா வந்து சேரும் பொது மணி 12.30. 'Arun Can we have ready made chappathi instead of preparing now??' இது ஹர்ஷ். பாலா இந்த விஷயத்தில் விவரம் ஜாஸ்தி வரும் போதே கைல ரெடி டு ஈட் பாயசம் மிக்ஸ் எடுத்துட்டு வந்துட்டா. சரி இவங்க ரெண்டு பேரும் ஒரு குரூப் பா தான்யா கிளம்பி இருகாங்க னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டு மீதி ஐடம் எல்லாத்தியும் நான் சமைச்சி முடிச்சேன்.

அதுக்குள்ள நண்பர் வீட்டுக்கு வந்துட்டார். சரி அவங்களுக்கு போர் அடிக்க கூடாதுன்னு லேப்டாப் ல தசாவதாரம் படாத போட்டுட்டு நான் சமைசிகிட்டு இருந்தேன். ஒரு வழியா நாங்க சமைச்சி முடிச்சு அவங்க சாப்பிடும் பொது படாத ஏற குறைய முழுசா பார்த்து முடிச்சிடாங்க.

இப்டி ஒரு வழியா அவங்க சாப்பிட்டு முடிக்கும் பொது மணி 4.30. சாப்பிட்டு முடிச்சிட்டு என் நண்பரும் அவர் மனைவியும் சொன்ன கமெண்ட்
'Arun can prepare 5 different dishes in same taste'

2 comments:

ஆயில்யன் said...

//'Arun can prepare 5 different dishes in same taste'///


:))))

என்னிய மாதிரி இல்லாம நீங்க ரொம்ப கெட்டிக்கார புள்ள போல....!

http://urupudaathathu.blogspot.com/ said...

கைல சுட்டதுக்கு அப்புறம், அதை கால்ல போட்டிருபீங்க??

அதனால காலையும் சுட்டுருப்பீங்க??
என்ன ??