Saturday, August 30, 2008

பொது நலத்திற்காக வாழ்தல்...

நண்பர் சர்வேசன் பொது நலத்திற்காக வாழ்ரத பத்தி ஒரு பத்தி ஒரு பதிவு போட்டு இருக்கார். அவர் பதிவ படிச்ச போதும் அத தவிர மத்த பொது சேவை நிகழ்ச்சி, செய்திகள் பார்க்கும் போதும் சரி எனக்கு தோனுது....நாட்ல இவ்ளோ பேர் பொது சேவை பண்றாங்க? எவ்ளோ பேர் மத்தவங்களுக்காக சேவை செய்றாங்க...ஆனா கஷ்டப்படற மக்கள் ஏன் இன்னும் கஷ்டபட்டுகிட்டே இருக்காங்க?

இது ஏன்னு யோசிக்கிறப்போ வந்த சில விஷயங்கள்

பொது நலத்துக்காக வாழணும்னு சொல்ற / செய்ற பலர் பல பெரிய விஷயங்கள செய்யும் பொது நிறைய சின்ன விஷயத்தை விடுறாங்க..அதாவது நான் நிறைய பேருக்கு படிகர்த்துக்கு உதவி பண்ணலாம்....பல விஷயங்களுக்காக ரோடுட்டுல இறங்கி போராடலாம் ஆனா வீட்ட விடு வெளிய போற போது விளக்க அணைக்காம போறது, இல்ல தெருல்ல குப்பை கொட்றது...இப்டி பல சின்ன விஷயங்கள்....இத எல்லாம் முதல ஒரு தனி மனிதன் மாத்திக்கலாமே?

இந்த மாதிரி நம்ம பண்ற எல்லா விஷயத்திலும் அடுத்தவங்கள பாதிக்காத மாதிரி இருந்தா அதுவே பொது நலத்துக்காக வாழற மாதிரி தானே?

இது தப்பா சரியானு எனக்கு தெரியாது...என் மனசுக்கு பட்டத சொல்றேன்....உங்க கருத்து என்ன?...கமெண்ட் பெட்டிய திறந்து வச்சி இருக்கேன் வந்து சொல்லுங்க மக்களே...

Friday, August 22, 2008

ஒலிம்பிக்கில் இந்தியா.

ஒலிம்பிக் 2008, இந்தியாவிற்கான பதக்க வாய்ப்புக்கள் almost முடிந்து விட்டது. இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் நமக்கு இது தான் most successful. ஒரு தங்க பதக்கம் மற்றும் இரு வெண்கல பதக்கங்களை வென்றுளோம். பதக்கம் வென்ற
1. அபினவ் பிந்த்ரா
2. சுஷில் குமார்
3. விஜேந்தர் குமார்
இந்த மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த most successful ஒலிம்பிக் வேலையில் நாம் சிந்திக்க சில விஷயங்கள்.
1. இதற்கு முந்தய ஒலிம்பிக் போட்டிகளில் வென்றவர்கள் அல்லது வெற்றிக்கு அருகே வந்தவர்கள் ஏன் பின்பு சோபிக்காமல் போனார்கள்?
1996 ல் பதக்கம் வென்ற பயஸ் மட்டுமே இதற்கு விதி விளக்கு, அவரும் கூட அடுத்து வந்த ஒலிம்பிக் போட்டிகளில் சாதிக்கவில்லை ஆனால் டென்னிஸ் grand slam போட்டிகளில் நிறைய சாதனை செய்தார். மற்றபடி கர்ணம் மல்லேஸ்வரி மற்றும் ரத்தோர் க்கு என்ன ஆனது?
மல்லேஸ்வரி சென்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று முதல் சுற்றில் வெளி ஏறினார், அதே நிலைமை தன் ரத்தோர் க்கும் இந்த ஒலிம்பிக் போட்டிகளில். ஏன் இந்த inconsistency?
இவர்கள் மட்டும் அல்ல, சென்ற முறை final வரை வந்த 4 x 400 meter relay team மற்றும் long jump அஞ்சு பாபி ஜார்ஜ் க்கு என்ன ஆயிற்று? இருவரும் இந்த தடவை முதல் சுற்றிலேயே வெளியேறினர். சென்ற போட்டிகளில் இருந்த இவர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு இன்னும் அல்லவா சிறப்பாக செய்து இருக்க வேண்டும்?
இந்தியாவில் விடை தெரியாத கேள்விகள் பல, அவற்றில் இதுவும் ஒன்றோ?
சரி சென்ற போட்டிகளை விடு விடுவோம் தற்போதைய ஒலிம்பிக்கில் சிறப்பாக செல்யல்பட்ட சிலர் அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் நன்றாக செயல் படுவார்கள் என நம்புவோமாக.
இதோ 2012 ஒலிம்பிக் போட்டிகளில் எனது நம்பிக்கை.
1. அபினவ் பிந்த்ரா
2. சுஷில் குமார்
3. விஜேந்தர் குமார்
மூவருமே தங்களது பதக்கங்களை தக்க வைத்து கொள்ளவேண்டும்.
மேலும்
1. Saina Neiwal (Badmiton)
2. சரத் கமல் (Table Tennis)
3. அகில் குமார் (Boxing)
மற்றும் இந்த போட்டிகளில் முதல் சுற்று மற்றும் கால் இறுதி போட்டிகளில் வெளி ஏறியவர்கள் அடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல் படுவார்கள் என நம்புவோமாக .

இது வரை அழகான பெண்கள் மட்டுமே வந்து கொண்டிருந்த எனது கனவுகளை தற்போது இவர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். 2012 ஆண்டில் இதற்கு விமோச்சனம் கிடைக்குமா?

Wednesday, August 20, 2008

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி. Vijeyndra Kumar boxing பந்தயத்தில் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இதில் அவர் தோல்வி அடைந்தாலும் வெண்கல பதக்கம் உறுதி.
அவர் தங்க பதக்கம் வெல்ல வாழ்த்துக்கள்.

ஓட்டை பக்கங்கள்

கேள்வி : இந்தியாவிற்காக சுஷில் குமார் பதக்கம் வென்று உள்ளாரே?

அவர் வென்றது பதக்கமே இல்லை. அவர் பிறந்து 8 மாதம் ஆகி இருக்கும் போது அவரை தூக்கிய அவர்கள் வீட்டு ஆயாவை காலால் நெஞ்சில் உதைத்து மல்யுத்தம் பழகி உள்ளார். இதையே இவர் தந்தை அல்லது தாயிடம் செய்து இருப்பாரா?
மேலும் அவருக்கு மூன்று வேலை சோறும் படுக்க இடமும் இருந்து உள்ளது. இப்படி பட்ட பணக்காரர் செய்ததா சாதனை. சாப்படிற்கே வழி இல்லாமல், பிச்சை எடுத்து உடம்பில் சத்தே இல்லாத ஒருவர் பதக்கம் வென்று இருந்தால் அது சாதனை.
மல்யுத்தம் என்பது என்ன ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளவது இது ஒரு விளையாட்டே அல்ல. விளையாட்டு என்பது புகழ் பெற்ற வார இதழில் யாரையாவது திட்டி கொண்டே இருக்க வேண்டும் அது தன் விளையாட்டு. இந்த விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க சிபாரிசு செய்யாத இந்திய அரசுக்கு இந்த வார சம்பட்டி அடி.
இது போல நல்ல பல பதிவை திரட்டும் தமிழ்மணத்திற்கு இந்த வார காதுல பூ.

Sunday, August 17, 2008

நான் எழுத நினைப்பதெல்லாம்....

இந்த பதிவு நான் எழுத ஆரம்பித்த பொது சர்ச்சைக்குரிய எந்த விஷயத்தயும் எழுத கூடாது என்று நினைத்தேன்...ஆனால் என் இரண்டாவது பதிவே இதை மீற வேண்டி இருக்கிறது :(...இதற்கான காரணம் நான் நேற்று ஒரு பிரபல வார இதழில் படித்த ஒரு கட்டுரை. அதை பல பேர் படிப்பதை கூட நான் விரும்பவில்லை, அதானல்தான் அந்த கட்டுரையின் வாசகங்களை கூட இங்கே கொடுக்க மனம் வரவில்லை.
அதில் அந்த பிரபல எழுத்தாளர் எழுதி இருபதின் சாராம்சம் 'அபினவ் பிந்த்ரா செய்து இருபது சாதனையே அல்ல'.
அதற்கான காரணம் -
1. அவர் ஒரு பணக்காரர்
2. அவர் பயிற்சி செய்த துப்பாக்கியின் விலை ரூ 30,000
3. அவர் ஏழு வயது சிறுவனாக இருந்த போது செய்ததாக சொல்லப்படும் ஒரு நிகழ்ச்சி

அய்யா உங்களுக்கு சில கேள்விகள்...
1. அவர் பணக்காரர் என்பதால் நகை கடையிலா பதக்கம் வாங்கினார்?
2. விலை கம்மியாக இருக்கும் ஒரு international sporting equipment சொல்லுங்கள் பார்க்கலாம்?
3. அவர் ஏழு வயது சிறுவனாக இருந்த போது செய்ததாக சொல்லப்படும் அந்த நிகழ்ச்சிக்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? - இல்லது நீங்கள் சிறுவனாக இருந்தபோது செய்த செயல்களுக்கு இப்பொது பொறுப்பு ஏற்பிர்களா?

கடைசியாக ஒரு வார்த்தை...நல்லது நடக்க உதவ வேண்டாம்...உபத்திரவம் செய்யாதிர்கள்....

நோட்: தமிழ்மணத்தில்...இந்த வாரம் நிறைய கடிதங்கள் மற்றும் கண்டனங்கள் வருவதால் வேறு தலைப்பு கொடுத்துள்ளேன் :)

Friday, August 15, 2008

Photography....

Though I had started this account much before, havent posted any blogs till date.
Reason being I dont know what to write and I am not good at describing in English and bad in writing Tamil.
Thanks to PIT I am posting my first blog.
I had no idea of photography till my brother gifted me with a Canon S2IS. Its a good mixture of point and shoot and SLR. But I have never used it as it should be. Off late I started searching for some inputs on photography , that's when I landed in PIT. I wont say I have started taking good pictures after reading those blogs because I haven't taken any good pics as such but atleast now I will think for a moment before I click some picture.

I have added some of my recently shot photos here. Please provide your valuable comments.




www.flickr.com








Arun Nishore Baskaran's itemsGo to Arun Nishore Baskaran's photostream