Wednesday, August 20, 2008

ஓட்டை பக்கங்கள்

கேள்வி : இந்தியாவிற்காக சுஷில் குமார் பதக்கம் வென்று உள்ளாரே?

அவர் வென்றது பதக்கமே இல்லை. அவர் பிறந்து 8 மாதம் ஆகி இருக்கும் போது அவரை தூக்கிய அவர்கள் வீட்டு ஆயாவை காலால் நெஞ்சில் உதைத்து மல்யுத்தம் பழகி உள்ளார். இதையே இவர் தந்தை அல்லது தாயிடம் செய்து இருப்பாரா?
மேலும் அவருக்கு மூன்று வேலை சோறும் படுக்க இடமும் இருந்து உள்ளது. இப்படி பட்ட பணக்காரர் செய்ததா சாதனை. சாப்படிற்கே வழி இல்லாமல், பிச்சை எடுத்து உடம்பில் சத்தே இல்லாத ஒருவர் பதக்கம் வென்று இருந்தால் அது சாதனை.
மல்யுத்தம் என்பது என்ன ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளவது இது ஒரு விளையாட்டே அல்ல. விளையாட்டு என்பது புகழ் பெற்ற வார இதழில் யாரையாவது திட்டி கொண்டே இருக்க வேண்டும் அது தன் விளையாட்டு. இந்த விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க சிபாரிசு செய்யாத இந்திய அரசுக்கு இந்த வார சம்பட்டி அடி.
இது போல நல்ல பல பதிவை திரட்டும் தமிழ்மணத்திற்கு இந்த வார காதுல பூ.

5 comments:

PPattian said...

கலக்கல்.. சாட்டையடி..

//அவர்கள் வீட்டு ஆயாவை காலால் நெஞ்சில் உதைத்து மல்யுத்தம் பழகி உள்ளார்//

ஹா..ஹா..ஹா..ஹா..

//பிச்சை எடுத்து உடம்பில் சத்தே இல்லாத ஒருவர் பதக்கம் வென்று இருந்தால் அது சாதனை//

:))))))))))))))))))))))))

அருண் நிஷோர் பாஸ்கரன் said...

வருகைக்கு நன்றி புபட்டியன் :)

உருப்புடாதது_அணிமா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சூப்பரப்பு...

muthukumaran said...

Very Nice.. I have enjoyed it

அருண் நிஷோர் பாஸ்கரன் said...

நன்றி அணிமா மற்றும் முத்து குமரன்