Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Saturday, August 30, 2008

பொது நலத்திற்காக வாழ்தல்...

நண்பர் சர்வேசன் பொது நலத்திற்காக வாழ்ரத பத்தி ஒரு பத்தி ஒரு பதிவு போட்டு இருக்கார். அவர் பதிவ படிச்ச போதும் அத தவிர மத்த பொது சேவை நிகழ்ச்சி, செய்திகள் பார்க்கும் போதும் சரி எனக்கு தோனுது....நாட்ல இவ்ளோ பேர் பொது சேவை பண்றாங்க? எவ்ளோ பேர் மத்தவங்களுக்காக சேவை செய்றாங்க...ஆனா கஷ்டப்படற மக்கள் ஏன் இன்னும் கஷ்டபட்டுகிட்டே இருக்காங்க?

இது ஏன்னு யோசிக்கிறப்போ வந்த சில விஷயங்கள்

பொது நலத்துக்காக வாழணும்னு சொல்ற / செய்ற பலர் பல பெரிய விஷயங்கள செய்யும் பொது நிறைய சின்ன விஷயத்தை விடுறாங்க..அதாவது நான் நிறைய பேருக்கு படிகர்த்துக்கு உதவி பண்ணலாம்....பல விஷயங்களுக்காக ரோடுட்டுல இறங்கி போராடலாம் ஆனா வீட்ட விடு வெளிய போற போது விளக்க அணைக்காம போறது, இல்ல தெருல்ல குப்பை கொட்றது...இப்டி பல சின்ன விஷயங்கள்....இத எல்லாம் முதல ஒரு தனி மனிதன் மாத்திக்கலாமே?

இந்த மாதிரி நம்ம பண்ற எல்லா விஷயத்திலும் அடுத்தவங்கள பாதிக்காத மாதிரி இருந்தா அதுவே பொது நலத்துக்காக வாழற மாதிரி தானே?

இது தப்பா சரியானு எனக்கு தெரியாது...என் மனசுக்கு பட்டத சொல்றேன்....உங்க கருத்து என்ன?...கமெண்ட் பெட்டிய திறந்து வச்சி இருக்கேன் வந்து சொல்லுங்க மக்களே...